Showing posts with label தமன்னா. Show all posts
Showing posts with label தமன்னா. Show all posts

Friday, October 15, 2010

ரூ.1 கோடி சம்பளம் கேட்டேனா? : தமன்னா ஆவேசம்!


ரூ.1 கோடி சம்பளம் கேட்டதால் தமன்னாவை ஒப்பந்தம் செய்ய இயக்குனர்கள் தயங்குகிறார்கள் என தகவல் வெளியானது. இது பற்றி தமன்னாவிடம்
கேட்டபோது அவர் கூறியது: தமிழில் கார்த்தியுடன் ‘சிறுத்தை', தெலுங்கில் அல்லு அர்ஜுன், நாக சைதன்யா படங்கள் என 3 படங்களில் நடித்து வருகிறேன். அடுத்து தமிழில் தனுஷ் ஜோடியாக ஒரு படம், தெலுங்கில் ஜூனியர் என்.டிஆர், ராம் ஆகியோருடன் 2 படங்கள் உள¢ளன. இந்த படங்களின் ஷூட்டிங் விரைவில் தொடங்க உள்ளது. மொத்தம் 6 படங்களில் நடிக்கிறேன். அடுத்த ஆண்டு ஏப்ரல் வரை கால்ஷீட் இல்லை.
இதற்கிடையில் சிலர் என்னிடம் கால்ஷீட் கேட்டார்கள். அவர்களிடம் என்னுடைய சூழலை சொன்னேன். ‘ஜனவரியிலாவது கால்ஷீட் கொடுங்கள்Õ என்றனர். ‘அதுவும் முடியாதுÕ என்றேன். இதை மனதில் வைத்துக்கொண்டு 1 கோடி ரூபாய் சம்பளம் கேட்பதாக வதந்தி பரப்புகிறார்கள். நான் யாரைப் பற்றியும் தவறாக கூற விரும்பவில்லை. ஒரே நாள் இரவில் நான் ஹீரோயின் ஆகிவிடவில்லை. கஷ்டப்பட்டு நடித்து, படிப்படியாக முன்னேறிதான் இந்த நிலைக்கு வந்திருக்கிறேன்.

Monday, October 4, 2010

கார்த்தியை காதலிப்பதாக வதந்தி பரப்ப வேண்டாம் -தமன்னா

 
கார்த்தியும் தமன்னாவும் காதலிப்பதாக செய்திகள் பரவின. “பையா” படப்பிடிப்பில் காதல் மலர்ந்ததாக கூறப்பட்டது. இதுபற்றி கார்த்தியிடம் கேட்டபோது மறுத்தார்.

நட்பு ரீதியாக பழகியதாகவும், காதல் இல்லை என்றும் கூறினார். தமன்னாவும் மறுத்துள்ளார். அவர் கூறும்போது, கார்த்தியுடன் காதல் இல்லை. நாங்கள் காதலிப்பதாக வதந்தி பரப்புகின்றனர். அதை நிறுத்த வேண்டும் என்றார். மேலும் அவர் கூறியதாவது:-
 
பெரிய நடிகர்களுடன் ஜோடியாக நடித்துவிட்டேன். ஷங்கர், கவுதம், பாலா போன்ற திறமையான இயக்குனர்கள் படங்களிலும் நடிக்க ஆர்வமாக உள்ளேன்.
 
நான் எந்த நடிகைக்கும் போட்டியில்லை. என்னை நம்புகிறேன். எனது வேலையை சிறப்பாக செய்கிறேன். நிறைய நடிகைகள் அறிமுகமாகிக் கொண்டு இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது.

Sunday, October 3, 2010

வேட்டை மன்னனா? குழப்பத்தில் தமன்னா ???


விண்ணைத்தாண்டி வருவாயா வெற்றிப்படத்திற்கு பிறகு நடிகர் சிம்பு, டைரக்டர் லி்ஙகுசாமி இயக்கத்தில் வே‌ட்டை படத்தில் நடிப்பதாய் இருந்தது.
கதாநாயகியாக தமன்னாவை போட வேண்டும் என சிம்பு விரும்பியதும், கடைசியில் வேட்டை படமே சிம்பு கையை விட்டு நழுவிப் போனதும் தெரிந்த சங்கதிதான்.
இலவச Magazine  Total Film Magazine November
  டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்



வேட்டை நழுவிய கையோடு லிங்குசாமியை வசைபாடி அறிக்கை விட்டதுடன், வேட்டை மன்னன் என்ற பெயரில் புதுப்படத்தில் நடிக்கப்போவதாக அவசர அறிவி‌ப்பையும் சிம்பு சமீபத்தில் வெளியிட்டார்.
இப்போது வேட்டை விவகாரம் வேரு ரூபத்தில் வேறு நபரை ஆட்டிக் கொண்டிருக்கிறது. அவர்தான் தமன்னா.
லிங்குசாமி எடுக்கும் வேட்டை படத்தில் நாயகன் ஆர்யாவுக்கு ஜோடியாக தமன்னாவை ஒப்பந்தம் செய்திருக்கிறார்கள். இந்நிலையில் தனது வேட்டை மன்னன் படத்திலும் தமன்னாவை நடிக்க வைக்க முயற்சி எடுத்து வருகிறார் சிம்பு. முதலில் வருவது வேட்டையா, வேட்டை மன்னனா? என்ற குழப்பத்தில் இருக்கும் தமன்னா, வேட்டை மன்னனுக்கு கால்ஷீட் கொடுக்கவா, வேண்டாமா? என்ற தயக்கத்தில் தவித்துக் கொண்டிருக்கிறாராம்.
தமன்னாவை வேட்டை மன்னன், வேட்டையாடாமல் இருப்பாரா என்ன?
தமன்னாவின் காற்றுள்ள‌போதே தூற்றிக் கொள் என்ற பாலிஸியை தெரிந்து கொண்ட சிம்பு, எவ்வளவு சம்பளம் வேண்டுமானாலும் தருகிறேன்… என்கிற ரீதியில் பேச்சுவார்த்தையை தொடங்கியிருக்கிறாராம்.

நல்ல கதை கிடைத்தால் சம்பளம் வேண்டாம் தமன்னா.


தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையும், சிக் நாயகிகளில் முக்கியமானவருமான தமன்னா கை நிறையப் படங்களுடன் நம்பர் ஒன்
இலவச Magazine  Total Film Magazine November
  டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்
நடிகையாக கோலிவுட்டில் வலம் வந்து கொண்டிருக்கிறார்.
முன்னணியில் இருந்தாலும் கூட அதிக படங்களை வாங்கிப் போட்டுக் கொண்டு நடித்துக் குவிக்க தான் விரும்பவில்லை என்றும் நல்ல ரோல்கள் கிடைத்தால் மட்டுமே நடிக்க ஒப்புக் கொள்வதாகவும் கூறுகிறார் தமன்னா.
இதுகுறித்து அவர் கூறுகையில், எத்தனை படங்கள் கையில் இருக்கின்றன என்பது குறித்து நான் கவலைப்படுவதே இல்லை. என்ன ரோல்கள் கிடைக்கின்றன என்பதை மட்டுமே பார்க்கிறேன். நல்ல பாத்திரங்கள் கிடைத்தால் மட்டுமே நடிக்க ஒப்புக் கொள்கிறேன்.
கல்லூரி படத்தில் நடித்தபோது மனதுக்கு நிறைவாக இருந்தது. அதேபோன்ற ரோல்களிலேயே அதிகம் நடிக்க ஆசைப்படுகிறேன்.
கல்லூரிப் படத்தில் நடித்தபோது நான் மேக்கப் கூட போடவில்லை. இயல்பான தோற்றத்திலேயே நடித்தேன். அந்தப் படம் முழுக்க வெளிப்புறப்படப்பிடிப்புதான். அதுபோன்ற கதை கிடைத்தால் சம்பளம் பற்றிக் கூட நான் கவலைப்பட மாட்டேன் என்கிறார் தமன்னா.

Hot Exposed Tammanna

பரவாயில்லை, சதையை நம்பும் நாயகிகளுக்கு மத்தியில் கதையை நம்பும் தமன்னா வித்தியாசமானவர்தான்.

Friday, September 24, 2010

நயன்தாரா விவகாரம்:சிம்புவை ரிஜெக்ட் செய்த‌ தமன்னா!

இயக்குனர் லிங்குசாமி இயக்கும் படத்தில் முதலில் நடிப்பதாக இருந்தவர் சிம்பு. காதாநாயகியாக தமன்னாதான் வேண்டும் என்று அடம்பிடிக்கப் போய் விவகாரம் வெடித்தது என்கிறார்கள். இயக்குனர் லிங்குசாமிக்கு தமன்னாவை கதாநாயகியாகப்போடுவதில் எந்த சிக்கலும் இல்லையாம். ஆனால் தமன்னாவுக்குதான் சிம்புவுடன் நடிக்க விருப்பமில்லை என்கின்றனர். நயன்தாரா விவகாரத்தில் சிம்பு நடந்து கொண்ட விதம் குறித்து தெறிந்து கொண்டதால் தான் சிம்புவுடன் நடிக்கமாட்டேன் என்று மறுத்துவிட்டாராம் தமன்னா. அதனால் தான் தன்னுடைய படத்திலிருந்து சிம்புவை கழட்டிவிட்டாராம் லிங்குசாமி.
இந்நிலையில் இயக்குனர் லிங்குசாமி விஜய்க்கு கதை சொல்லியிருக்கிறார். ஆனால் விஜய்யோ "நாம் சேர்ந்து படம் பண்ணலாம், தற்போது வேறு படங்களில் கமிட்டாகியிருப்பதால் தற்போதைக்கு நடிக்க இயலாது” என்று கூறியிருக்கிறார்.
தன்னிடம் கதை தயாராகயிருந்ததால் தற்போது ஆர்யாவை வைத்து "வேட்டை” என்ற படத்தை இயக்குவதாக அறிவித்துவிட்டார் லிங்குசாமி.
சிம்புவுக்கு ஒகே சொல்லாத தமன்னா இப்போது வேட்டையில் ஆர்யாவுடன் ஜோடி சேர ஒப்பு கொண்டிருகிறார். ஆர்யாவுடன் தமன்னா ஜோடி சேர்ந்திருப்பது இது தான் முதல் முறை. பையா படத்தை தொடர்ந்து லிங்குசாமி இயக்கத்தில் இரண்டாவது முறையாக நடிக்கவிருக்கிறார் தமன்னா.